search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜனாதிபதி தேர்தல்"

    • ஜனாதிபதி தேர்தல் வரும் 18-ம்தேதி நடைபெற உள்ளது.
    • ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவும், யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர்.

    புதுடெல்லி :

    ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். அவர்கள் மாநிலம் தோறும் சென்று தங்களுக்கு ஆதரவு திரட்டுகின்றனர்.

    இந்நிலையில் வருகின்ற 18-ந்தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் அரசியல் விவகார குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர்.

    இன்று நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், ஜனாதிபதி தேர்தலில் தங்களின் ஆதரவு யாருக்கு என்பதை ஆம் ஆத்மி கட்சி அறிவிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார்.
    • துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவி காலமும் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதியுடன் முடிகிறது.

    புதுடெல்லி:

    இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் வருகிற 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வருகிற 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

    ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார். எதிர்கட்சி வேட்பாளராக யஷ்வந்த் சின்கா நிறுத்தப்பட்டு உள்ளார்.

    இதுபோல துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவி காலமும் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதியுடன் முடிகிறது. இதற்கான தேர்தல் ஆகஸ்டு 6-ந் தேதி நடக்கிறது.

    இதில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற குழு நாளை கூடி முடிவு செய்கிறது.

    இதற்கிடையே எதிர்கட்சிகளும் துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது.

    இதில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது பற்றி நாளை மறுநாள் 17-ந் தேதி ஆலோசனை நடத்த உள்ளனர்.

    • ஜனாதிபதி தேர்தல் வரும் 18-ம்தேதி நடைபெற உள்ளது.
    • பா.ஜ.க. ஆதரவு ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார்.

    போபால் :

    ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ள யஷ்வந்த் சின்கா நேற்று மத்திய பிரதேசம் சென்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பா.ஜனதா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அவர் கூறுகையில், 'ஜனாதிபதி தேர்தலில் கூட பா.ஜனதா கட்சி, 'ஆபரேஷன் கமலம்' திட்டத்தை அரங்கேற்றுகிறது.

    அதன்படி தங்கள் வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய பா.ஜனதா அல்லாத உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய அளவில் பணம் கொடுத்து வருகிறது. இது குறித்த நம்பத்தகுந்த தகவல்கள் எனக்கு கிடைத்துள்ளன. ஏனெனில் சுதந்திரமான, நேர்மையான தேர்தல் முடிவை கண்டு பா.ஜனதா அஞ்சுகிறது' என குற்றம் சாட்டினார்.

    ஆளும் பா.ஜனதாவின் இத்தகைய மோசடி குறித்து, ஜனாதிபதி தேர்தலை நடத்தும் மாநிலங்களவை செயலரும், தேர்தல் கமிஷனும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் யஷ்வந்த் சின்கா கேட்டுக்கொண்டார்.

    • ஜனாதிபதி தேர்தல் வரும் 18-ம்தேதி நடைபெற உள்ளது.
    • பா.ஜ.க. ஆதரவு ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார்.

    கவுகாத்தி :

    ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இதையடுத்து, நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசியல் கட்சி தலைவர்களிடம் ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில், அசாம் மாநிலத்திற்கு சென்று எதிர்கட்சிதலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.

    அப்போது அவர் பேசுகையில், நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வேன் என யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில், "அசாமின் முக்கிய பிரச்சனை குடியுரிமையாகும். இந்த சட்டத்தை நாடு முழுவதும் கொண்டு வர அரசு விரும்பியது. ஆனால் இன்னும் அதை கொண்டு வர முடியவில்லை. முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக இந்த சட்டத்தை அமல்படுத்தவில்லை என கூறினார்கள். ஆனால் இப்போது வரை இந்த சட்டத்ததை அமல்படுத்த முடியவில்லை.

    ஏனெனில், இது அவசரமாக கொண்டு வரப்பட்ட முட்டாள்தனமான வரைவு. அரசியலமைப்பிற்கு வெளியில் இருப்பவர்களால் ஆபத்து வரவில்லை. ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களால் ஆபத்து உள்ளது. நாங்கள் அதனை பாதுகாக்க வேண்டும். நான் ராஷ்டிரபதி பவனில் இருந்தால் குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வேன்".

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே ஆதரவு தெரிவித்துள்ளார்.
    • இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியை உடைத்து அதிருப்தி குழுவுடன் இணைந்து பா.ஜனதா ஆட்சியை பிடித்து உள்ளது. இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

    இதுதொடர்பாக மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் பாலா சாகேப் தோரட் கூறும்போது, "சிவசேனா நாங்கள் இருக்கும் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இருக்கிறது. ஆனால் அவர்கள் எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவரை சிவசேனா ஆதரிப்பது ஏன் என்று தெரியவில்லை" என்றார்.

    • ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ம் தேதி நடைபெற உள்ளது.
    • உத்தவ் தாக்கரே அணியில் தற்போது 15 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    மும்பை:

    சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து அதிருப்தி அணியினர் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளனர். அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல் மந்திரியாக பதவி ஏற்றார். அவருக்கு சிவசேனாவின் மொத்த எம்.எல்.ஏ.க்கள் 55 பேரில் 40 பேர் ஆதரவு உள்ளது.

    சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அணியில் தற்போது 15 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் உள்ளனர். சிவசேனா எம்.பி.க்கள் 18 பேரில் பலர், சிவசேனாவின் இரு அணிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என உத்தவ் தாக்கரேயை வலியுறுத்தி வந்ததாக கூறப்பட்டது. மேலும் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளரான திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் உத்தவ் தாக்கரேக்கு மும்பையைச் சேர்ந்த சிவசேனா எம்.பி. ராகுல் செவாலே கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

    இதற்கிடையே, சிவசேனா எம்.பி.க்கள் கூட்டத்தை உத்தவ் தாக்கரே நேற்று கூட்டினார். இதில் 13 எம்.பி.க்கள் கலந்துகொண்டனர். ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த், கட்சி கொறடா பதவியில் இருந்து நீக்கப்பட்ட பாவனா காவ்லி உள்பட 5 எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.பி.க்களில் பலர், ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என உத்தவ் தாக்கரேயை கேட்டுக்கொண்டதாக கட்சியின் மூத்த தலைவர் கஜானன் கிரிதிகர் தெரிவித்தார்.

    இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க உள்ளேன் என சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    • பா.ஜ.க. கூட்டணியின் சுரேஷ் பிரபு, ஹர்தீப் பூரி, எஸ்.எஸ்.அலுவாலியா ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன.
    • காங்கிரஸ் கட்சிக்கு பாராளுமன்றத்தில் 22 சதவீத வாக்குகளே உள்ளன.

    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவி காலம் ஆகஸ்டு 10-ந் தேதி முடிகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய கடந்த 5-ந் தேதி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அன்றைய தினமே மனு தாக்கலும் தொடங்கியது.

    துணை ஜனாதிபதி பதவிக்கு மனு தாக்கல் செய்ய வருகிற 19-ந் தேதி கடைசி நாளாகும். 20-ந் தேதி மனுக்கள் பரிசீலனையும், 22-ந் தேதி மனு வாபஸ் பெற கடைசி நாளாகும். போட்டி இருந்தால் ஆகஸ்டு 6-ந் தேதி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு அன்றே முடிவும் அறிவிக்கப்படும்.

    மனு தாக்கலுக்கு இன்னும் 6 நாட்களே அவகாசம் உள்ள நிலையில் துணை ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பா.ஜனதா கூட்டணி சார்பில் கேரள கவர்னர் ஆரீப்கான், முன்னாள் கவர்னர் நஜீம்கமார்துல்லா, பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி அம்ரீந்தர் சிங், உத்தரபிரதேச கவர்னர் அனந்தி பென் படேல் ஆகியோரது பெயர் அடிபட்டது.

    என்றாலும், முன்னாள் மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி பெயர் பா.ஜ.க. தலைவர்களிடையே தீவிர பரிசீலனையில் உள்ளது. அவரது பெயரை விரைவில் பா.ஜ.க. மேலிடம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே பா.ஜ.க. கூட்டணியின் சுரேஷ் பிரபு, ஹர்தீப் பூரி, எஸ்.எஸ்.அலுவாலியா ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன. என்றாலும் முக்தர் அப்பாஸ் நக்விக்குத் தான் அதிக வாய்ப்புகள் இருப்பதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பாராளுமன்றத்தில் பா.ஜனதா கூட்டணிக்கு 58 சதவீத எம்.பிக்கள் ஆதரவு உள்ளது. எனவே எம்.பி.க்கள் மட்டுமே வாக்களித்து தேர்வு செய்ய உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா நிறுத்தும் வேட்பாளர் மிக மிக எளிதில் வெற்றிபெறுவார்.

    காங்கிரஸ் கட்சிக்கு பாராளுமன்றத்தில் 22 சதவீத வாக்குகளே உள்ளன. மற்ற கட்சிகளுக்கு 21 சதவீத வாக்குகள் இருக்கின்றன. என்றாலும், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் சேர்ந்தாலும் துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற இயலாது.

    இதனால் எதிர்க்கட்சிகள் துணை ஜனாதிபதி தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது புரியாமல் தவித்து கொண்டிருக்கின்றன. முக்தர் அப்பாஸ் நக்வியை பா.ஜனதா வேட்பாளராக நிறுத்தினால் அவரை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    • உத்தவ் தாக்கரே அணியில் தற்போது வெறும் 15 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் உள்ளனர்.
    • ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது.

    மும்பை :

    சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து, அதிருப்தி அணியினர் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளனர். அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவருக்கு சிவசேனாவின் மொத்த எம்.எல்.ஏ.க்கள் 55 பேரில் 40 பேர் ஆதரவு உள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அணியில் தற்போது வெறும் 15 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் உள்ளனர்.

    இதேபோல சிவசேனா எம்.பி.க்கள் 18 பேரில் பலர், சிவசேனாவின் இரு அணிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று உத்தவ் தாக்கரேயை வலியுறுத்தி வந்ததாக கூறப்பட்டது. மேலும் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளரான திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேக்கு மும்பையை சேர்ந்த சிவசேனா எம்.பி. ராகுல் செவாலே கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

    இந்தநிலையில் சிவசேனா எம்.பி.க்கள் கூட்டத்தை நேற்று உத்தவ் தாக்கரே கூட்டினார். இதில் 13 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த், கட்சி கொறடா பதவியில் இருந்து நீக்கப்பட்ட பாவனா காவ்லி உள்பட 5 எம்.பி.க்கள் கலந்து கொள்ளவில்லை.

    கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.பி.க்களில் பலர், ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேயை கேட்டுக்கொண்டதாக கட்சியின் மூத்த தலைவர் கஜானன் கிரிதிகர் நிருபர்களிடம் தெரிவித்தார். இதனால் ஜனாதிபதி தேர்தலில் உத்தவ் தாக்கரே என்ன முடிவை எடுக்கப்போகிறார் என்பதும், 5 எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாததும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது.
    • எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியில் உள்ளார்.

    அமராவதி :

    ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் வியூகம் வகுக்கும் குழு கூட்டத்தில் இதை அவர் அறிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    தெலுங்கு தேசம் எப்போதும் சமூக நீதிக்கு துணை நிற்கும். கடந்த காலத்தில், ஜனாதிபதி பதவிக்கு கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாம் ஆகியோரை ஆதரித்துள்ளோம். அதே உணர்வில், பழங்குடி இனத்தை சேர்ந்த திரவுபதி முர்முவை ஆதரிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆந்திராவில், ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • எம்.பி.க்களை பொறுத்தவரை டெல்லியில் வாக்களிக்கலாம் அல்லது வேறு மாநிலத்தில் உள்ள சட்டமன்ற வளாக வாக்குச்சாவடியில் வாக்களிக்கலாம்.
    • எங்கு வாக்களிக்க உள்ளோம் என்பதை உரிய காரணத்துடன் கடிதம் மூலம் எம்.பி.க்கள் தெரிவிக்க வேண்டும். அந்த காலக்கெடு நேற்றுடன் முடிந்தது.

    சென்னை:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது.

    இதில் பா.ஜனதா கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். காங்கிரஸ் கூட்டணி சார்பில் யஷ்வந்த் சின்கா நிறுத்தப்பட்டுள்ளார்.

    இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட உள்ளனர். இந்த தேர்தலில் மொத்தம் 4,809 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியானவர்களாக உள்ளனர். இதில் 233 பேர் ராஜ்ய சபா உறுப்பினர்கள், 545 பேர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4,033 அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கும்.

    இதில் தமிழகத்தில் இருந்து 234 எம்.எல்.ஏ.க்கள், 39 பாராளுன்ற உறுப்பினர்கள், 18 ராஜ்ய சபா எம்.பி.க்கள் ஓட்டு போட உள்ளனர்.

    இதில் எம்.பி.க்களை பொறுத்தவரை டெல்லியில் வாக்களிக்கலாம் அல்லது வேறு மாநிலத்தில் உள்ள சட்டமன்ற வளாக வாக்குச்சாவடியில் வாக்களிக்கலாம். எங்கு வாக்களிக்க உள்ளோம் என்பதை உரிய காரணத்துடன் கடிதம் மூலம் எம்.பி.க்கள் தெரிவிக்க வேண்டும். அந்த காலக்கெடு நேற்றுடன் முடிந்தது.

    தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி டெல்லியில் நடைபெற்று வருகிறது.

    தமிழக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வாக்குச் சீட்டுகளை வாங்கி வருவதற்காக சட்டசபை செயலக அதிகாரி 11-ந்தேதி விமானத்தில் டெல்லி சென்று தேர்தல் கமிஷனில் ஓட்டு பெட்டி மற்றும் ஓட்டு சீட்டுகளை பெற்று 12-ந்தேதி போலீஸ் பாதுகாப்புடன் சென்னை திரும்புகிறார்.

    விமானத்தில் தனி இருக்கையில் ஓட்டு பெட்டி வைக்கப்பட்டு பாதுகாப்புடன் எடுத்து வரப்படும். சட்டசபை செயலக வளாகத்தில் தனி அறையில் ஓட்டுப்பெட்டி மற்றும் வாக்குச் சீட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறை சீல் வைக்கப்படும். ஓட்டுப் பதிவு அன்றுதான் பெட்டி வெளியில் எடுக்கப்படும்.

    ஓட்டுப்பதிவு முடிந்ததும் அன்று மாலையே உரிய பாதுகாப்புடன் விமானத்தில் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்படும்.

    எம்.பி.க்கள் வாக்களிக்க பச்சை நிறத்திலும், எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க இளஞ்சிவப்பு நிறத்திலும் ஓட்டுச் சீட்டு அச்சடிக்கப்பட்டு உள்ளது.

    • ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது.
    • எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியில் உள்ளார்.

    மும்பை :

    நாட்டின் ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியில் உள்ளார். இந்தநிலையில் பா.ஜனதாவின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என சிவசேனா எம்.பி. ராகுல் செவாலே, கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதி உள்ளார். சிவசேனா மராட்டியத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாவிகாஸ் கூட்டணியில் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தநிலையில் ராகுல் செவாலே, உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதம் குறித்து நேற்று தானேயில் சிவசேனா அதிருப்தி அணி தலைவரும், முதல்-மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டேவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:-

    திரவுபதி முர்மு நாட்டின் ஜனாதிபதியாக பிரதமர் மோடி வாய்ப்பு கொடுத்து உள்ளார். அவர் நாட்டின் ஜனாதிபதி ஆவது நாட்டிற்கு பெருமை மற்றும் கவுரவம் ஆகும். பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதால் நானும் பெருமை அடைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜனாதிபதி பதவி என்பதும் நாட்டின் மூத்த மற்றும் முதன்மை பதவியாகும்.
    • ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார்.

    பெங்களூரு:

    எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் விரைவில் முடிய உள்ளது. ஜனாதிபதி பதவி என்பதும் நாட்டின் மூத்த மற்றும் முதன்மை பதவியாகும்.

    பா.ஜனதா அரசால் நடத்தப்படும் சட்டவிரோத ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். நமது கூட்டணி கட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் உள்பட அனைவரும் ஒருசேர வாக்களித்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    அவர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க யஷ்வந்த் சின்கா வெற்றி பெற வேண்டும். அவருக்கும் மதவாதத்துக்கு எதிராக இருக்கும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×